பறவைகளுக்கு மட்டும்

பறவைகளுக்கு மட்டும்!


உயர உயர பறப்பதனால் தான்

என்னவோ


பறவைகள் மனதில் மட்டும்

விசாலப்பார்வை


நொடிக்கு நொடி சிந்திப்பதனால் தான்

என்னவோ


மனிதன் மனதில் மட்டும்

விகாரப்பார்வை


ஆதலால்…


எல்லைக்கோடு வரைந்தான்!

வெறுப்பை வளர்த்தான்!

‘மனிதம்’ கொன்றான் ..


முடிவில்லாமல் கொல்கிறான் ..


யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

பறவைகளுக்கு மட்டும்…


https://youtube.com/shorts/jhksUfKJ1-M?si=EnSIkaIECMiOmar

Comments